இரவின் நீளம்
துயரங்களின்போது
மிக நீண்டதாகிறது இரவு.
பரபரத்த பகல்வேளையின்
வடிகால்களில்
வெளியேறியிருந்த துக்கத்தை
நம்முள்
முழுவதுமாய் நிரப்புகிறது
இரவு.
"அல்ப்ரோசொலம்" உட்கொண்டும்
உறக்கமில்லாமல்
காலையில் சோர்ந்து விழுபவர்களிடம்
கேட்டுபாருங்கள்
இரவும்
இரவின் நீளமும்
எவ்வளவு கொடுமையானதென்று.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home